மார்கழித்திங்கள்
மார்கழித்திங்கள் மதி நிறைந்த ந்ன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளம்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
இன்று மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. மேலே உள்ள ஆண்டாள் படம் என்னுடைய தாத்தா காலத்திலிருந்து என் வீட்டில் திருவாராதனத்தில் இருக்கிறது. சுமார் 80 வருட பழமையான படம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை இந்த மார்கழியில் இங்கு பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
0 Comments:
Post a Comment
<< Home